வவுனியா வைத்தியசாலைக்குள் சோதனைகள் தீவிரம்!!

வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களது பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள், தலை கவசங்கள் ஏதெனும் அணிந்திருந்தால் அவற்றையும் சோதனை செய்து வைத்தியாசலைக்கு பொலிஸார் அனுமதித்து வருகின்றனர்.
அத்துடன் இன்று கொழும்பு களுவோவில வைத்தியசாலைக்குள் மர்ம பொதி இருந்ததாக கிடைத்த தகவலையடுத்து விஷேட பாதுகாப்பு பலப்படுத்தப்படு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வைத்தியசாலைக்குள் இருந்து பொதுமக்களை  வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.