வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு!!

வடக்கு கரோலினாவில் சார்லட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவன் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் ட்றிஸ்ரன் அன்ட்ரூ ரெறெல் (வயது – 22) என பொலிஸார் அறிவித்துள்ளனர். அவர் மீது இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

எனினும், இத்துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தொடர்பாக இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எவையும் வெளியாகவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.