ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!!

ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் சிறுவன் உட்பட மூன்று பேர் உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (40). தனியார் நிறுவன ஊழியர். இவரது அண்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்ப்பதற்காக சங்கர், அவரின் அக்காள் பானுமதி மற்றும் பானுமதியின் பேரன் நித்திஷ் ஆகிய மூவரும் இன்று காலை சென்னை செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சிறுவன் உட்பட மூன்று பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்ததும், ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விரைந்துவந்து சடலங்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.                             
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.