தற்கொலை குண்டுதாரியின் தாய் மற்றும் சகோதரி வெளிநாட்டில் கைது!!
தெஹிவளையில் வெடித்து சிதறிய ஐ.எஸ் பயங்கரவாதியின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து ஒக்லன்ட் பகுதியில் வசிக்கும் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் இவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்ற பயங்கரவாதியின் தாய் மற்றும் சகோதரியிடமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரும் உரிய முறையில் விசாரணைக்கு உதவுவதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்ற பயங்கரவாதி தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தார். எனினும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தெஹிவளையில் வெடித்து சிதறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை