வடகொரிய தலைவர் ஏவுகணைப் பரிசோதனையை பார்வையிட்டார்!

ஏவுகணைப் பரிசோதனையை வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டுள்ளார். வடகொரிய அரச செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


குறிப்பிட்ட தொகை குறுந்தூர ஏவுகணைகளை ஹூடோ தீபகற்பத்திலிருந்து ஜப்பானிய கடலில் ஏவி வடகொரியா நேற்று(சனிக்கிழமை) பரிசோதனை செய்திருந்தது.

பல்வேறு வகையான ஏவுகணைகள் பரீட்சிக்கப்பட்ட இந்தப் பரிசோதனை நடவடிக்கையினை வடகொரிய தலைவர் பார்வையிட்டுள்ளார்.

வடகொரியாவின் போர்த்திறனை அதிகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இதன்போது உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையிலான சிறந்த உறவில் இவ்வாறான ஏவுகணை பரிசோதனைகள் மூலம் விரிசல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் வட கொரிய தலைவர் ஈடுபட மாட்டார் என தாம் நம்புவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.