வடக்கில் விடுதலைப் புலிகளை தேடும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்லை–சுரேஸ் சாடல்!

ஐ.எஸ். பயங்கரவாதிகள்,விடுதலைப் புலிகளை குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடாது வடக்கில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தவே பாதுகாப்புத் தரப்பினர் முயற்சித்து வருகிறார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். இன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பிலும் கிழக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் பல காலமாக நிலைகொண்டுள்ளனர். வவுணதீவு பொலிஸ்கொலை, தொடர்ச்சியாக ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, பலர் கைது செய்யப்பட்டமை போன்ற பல செயல்கள் இடம்பெற்ற போதிலும் அதனை பாதுகாப்பு தரப்பினர் கண்டுகொள்ளவில்லை.

தற்போது குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்கு வந்துவிட்டதாக சர்வதேச நாடுகள் எச்சரிக்கைவிடுக்கின்ற போதிலும் பாதுகாப்புத் தரப்பினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தேடாது வடக்கில் புலிகளையே தேட முயற்சிக்கின்றனர்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.