பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என இந்திய மத்திய அரசு மறுப்பு!!

இலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 


இலங்கையில் கடந்த 21-ந் திகதி ஈஸ்டர் பண்டிகையின் போது 3தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 9பயங்கரவாதிகள் நடத்திய இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 253பேர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

இலங்கையில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று இருக்கலாம் என்று இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனநாயகா தெரிவித்து இருந்தார். பி.பி.சி. தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக பயங்கரவாதிகள் சிலர் இந்தியாவில் உள்ள காஷ்மீர், கேரளா, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர். நிச்சயமாக பயங்கரவாதிகள் ஏதேனும் பயிற்சி பெறுவதற்காக சென்று இருக்கலாம் அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொள்வதற்காக அவர்கள் இந்தியாவுக்கு சென்று இருக்கலாம் என்று கூறி இருந்தார். 

இதற்கு இந்தியா மறுத்துள்ளது. இலங்கை பயங்கரவாதிகள் இந்தியா வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,இலங்கையில் தற்கொலை படை தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு இந்த ஆண்டில் வருகை தந்த இலங்கையை சேர்ந்த 12பேர்களின் ஆவணங்கள் மறுபடியும் சரிபார்க்கப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் யாரும் இங்கு வரவில்லை என்று இந்திய பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன.வேறு பெயர்களில் பயங்கரவாதிகள் இந்தியா வந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் இலங்கை அரசு ஆதாரங்களை வழங்கினால் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.