கொட்டகலையில் வெடிமருந்துகள் மீட்பு!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட கொட்டகலை ஸ்ரீ பெரகும் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோவிற்கு அதிகமான வெடி மருந்துகள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இப்பாடசாலையின் வளாகப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்த போது அங்கு குப்பை கூழங்கள் நிறைந்துள்ள ஒரு பகுதியில் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இந்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இவை கல் உடைப்பதற்காக பாவிக்கப்படும் வெடி மருந்துகள் என பாதுகாப்பு பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிங்கள வித்தியாலயத்தின் வளாகப்பகுதிகள் அப்பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்களால் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குப்பை கூழத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை இருப்பதை கண்டு பெற்றோர்கள் உடனடியாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்பு பிரிவினர் பொதியை மீட்டு பார்வையிட்ட போது அதில் கல் உடைக்க பயன்படுத்தும் வெடி மருந்துகளே இருப்பதாகவும், இப்பகுதியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எவரேனும் இதை தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.