மிரட்டல் கடிதம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இளைஞன் விடுதலை!!

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பட்ட மிரட்டல் கடித விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம்- சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதன்போது அக்கடித்தில் காணப்பட்ட ஒளிப்படத்திலுள்ள இளைஞனை பொலிஸார் கைது செய்து, அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

குறித்த கடிதத்தில் இளைஞன் தொடர்புபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து யாழ்.பொலிஸார் அவரை விடுதலை செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞனையே  பொலிசார் அண்மையில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதன்போது குறித்த இளைஞன், தனது முகநூலிலுள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளார் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது ஒளிப்படம் முகநூலில் இருந்து தரவிறக்கப்பட்டு போலிக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டமை குறித்து இளைஞரிடம் வாய்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இளைஞரது ஒளிப்படத்தை அவரது முகநூலிலிருந்து தரவிறக்கம் செய்து, அந்தக் கடிதத்தில் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் தற்போது முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.