தொலைத்தொடர்பு சமிக்ஞை முடக்கிகளுடன் ஒருவர் கைது!

தொலைத்தொடர்பு வலையமைப்புகளை துண்டிக்கப் பயன்படுத்தும் 8 சமிக்ஞை முடக்கிகளுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


நீர்கொழும்பு பகுதியில் பொலிஸாரும் ராணுவத்தினரும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் குறித்த கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, நீர்கொழும்பு, லாசரஸ் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த கருவியை அவர் வைத்திருந்தமைக்கான நோக்கம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டியவே அதிக பாதிப்புகளை எதிர்கொண்டது. கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 114 பேர் உயிரிழந்தனர். இதேவேளை நேற்று முன்தினமும் அங்கு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.