மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகளை விவிபேடுடன் (மின்னணு வாக்கெண்ணும் இயந்திரம்) ஒப்பிட்டு எண்ண வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


அனைத்து சட்டபேரவை தொகுதிகளிலும் இ.வி.எம் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை விவிபேட்  இயந்திரங்கள் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என காங்கிரஸ், தெலுங்கு தேசம் உட்பட 21 எதிர்க்கட்சிகள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தன.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இ.வி.எம் இயந்திரங்களுடன் 50 சதவீத விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பிட்டு சரிபார்த்தால் காலதாமதமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் உள்ள 5 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவாகும் வாக்குகளை விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து 21 கட்சிகள் இணைந்து மறுசீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.