போராட்டங்களை மழுங்கடிக்கும் முயற்சியே மாணவர் கைது!! கேப்பாபிலவு மக்கள் !!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது மூலம், தாயகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களை மழுங்கடிக்க தென்னிலங்கை முற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக கேப்பாப்புலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


கேப்பாப்புலவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லீலாவதி இதனைக் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை ஜனாதிபதியும் தமிழ் அரசியல் தலைவர்களும் விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்த மக்கள், அவ்வாறு விடுதலை செய்யப்படாவிட்டால் தாம் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டனர்.

ஜனநாயக ரீதியில் தாம் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் அவசரகாலச் சட்டம் காரணமாக மக்களின் பங்களிப்பு குறைவடைவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது அச்சத்தின் மத்தியிலேயே தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.