வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!

வடகொரியா இரு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளதாக, தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தலைநகர் பியோங்யாங்கின் வட-மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதி ஊடாக இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
420 கிலோமீற்றர் மற்றும் 270 கிலோமீற்றர் தூர இலக்கை தாக்கும் வகையில் இவ்விரு ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன.
அணுவாயுத பேச்சுவார்த்தை குறித்த முட்டுக்கட்டைகளை தீர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் அமெரிக்க உயர்மட்ட தூதுவர் ஒருவர் தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையிலேயே வடகொரியாவின் இந்த புதிய ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.
வியட்நாமில் இறுதியாக நடைபெற்ற அமெரிக்க – வடகொரிய பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், அது தொடர்பாக வடகொரியா அமெரிக்காவிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க எதிர்பார்த்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.