நேரில் வந்து பேசும் தெய்வம் அம்மா!! அன்னையர்தின சிறப்பு கட்டுரை!!
ஒரு தாய்க்கு பிள்ளையாய் இருப்பதைவிட நூறு தாய்க்கு மகளாக மகனாக ஆசைப்படுங்கள். அந்த எண்ணமே ஆயிரம் மடங்கு அன்பை உங்கள் மனதில் விதைக்கும்.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மவை வணங்காமல் உயர்வில்லையே!!
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறேது ……
எனத் தொடர்கிறது அன்னையைப் போற்றும் சொல்லாடல்.
அம்மாவைவிட உலகில் உயர்வுகள் வேறேதும் இல்லை என்பதே சாராம்சம். அம்மா என்பவள், உயிர்களின் ஜனிப்பில் தன்னைக் கரைப்பவள். பெண் பிறவி என்பதே பேறு பெற்றதுதான். உலகப் படைப்புகளில் உன்னதமானது பெண்பிறப்பு என்பதற்கு கவிஞர்களின் வார்த்தைகளும் சான்று பகிர்கின்றன. உறவுகள், நட்புகள் என அடுத்தவர்க்காய் மலர்வதற்காகவும் மகிழ்வதற்காகவும் தேய்ந்து போவதே பெண்ணின் இயல்பு. அதிலும் பெண்ணவள் தாயாகிவிட்டால் சொல்லவும் வேண்டுமோ? தாய்மைக்குப் பின்னான பெண்ணின் மாற்றம் என்பது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கொள்ளப்படவேண்டியது.
அணைக்கின்ற இயல்பு கொண்டவள் அன்னை. அன்னையாவதற்கு ஒரு குழந்தையைப் பிரசவிக்க வேண்டும் என்பதில்லை. அன்பு, கருணை, இரக்கம், நீடிய சாந்தம், பொறுமை என அனைத்து தாய்மை உணர்வுகளும் கொண்டவள், நிச்சயம் அன்னையே.
ஒரு குழந்தையைப் பிரசவிக்காமலே அன்னை எனப்போற்றப்பட்டவர்கள் பலரை நாம் வரலாற்றில் காண்கின்றோம். தாதியச் சேவையை கனிவுடன் ஆற்றி , அன்பான வார்த்தைகளால் காயமுற்றோரைத் தேற்றி, உலகம் முழுவதும் தாதியத்தின் தாயாகப் போற்றப்படுபவர் அன்னை புளோறன்ஸ் நைற்றிங்கேல். செல்வச் சீமாட்டியான இவரது மனதிலே உதித்த இரக்கமும் கருணையும் இவரை உலகத்திற்கே தாயாக்கியது. அப்போதைய போர்க்காலத்தில், காயமுற்றிருந்த வீரர்கள், இவரது வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பர் என்றும் அவரது வார்த்தைகளின் கனிவில் தமது வலியைக்கூட மறந்திருந்தனர் என்றும் கூறுகின்றது வரலாறு.
அன்னை தெரேசா உலகமே அறிந்த உத்தம தாய். இவர் கருவுற்று அன்னையாகாமல் கருணையுற்று அன்னையானவர். உலகத்தின் அழகான பெண் யாரென்றால், அதுவும் அன்னை தெரேசாதான். சேரி மக்களின் மனங்களில் எல்லாம் தெய்வமாகி நின்ற அவர், 'அருவருப்பு' என்பதைப் புறந்தள்ளிவிட்டு எல்லோரையும் கருணையோடு நோக்கியவர். வலிகளையும் அவமானங்களையும் பொறுத்து, சேரிவாழ் மக்களுக்காகவும் இயலாதவர்களுக்காகவும் பாடுபட்டு உழைத்தவர்.
தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது தன் பிள்ளைக்கென ஒதுக்கும், மனம் தாய்க்கு மட்டுமே உண்டு. தான் படிப்பறிவற்றவளாய் பாமரப் பெண்ணாய் இருந்தாலும் தன் பிள்ளை மட்டும் அறிவாளியாய் இருக்கவேண்டும் என கனவு காணவும் அதற்காக கடின வலிகளோடு போராடவும் பிள்ளைக்காய் பசி பொறுக்கவும் கையில் கிடைக்கும் ஒரு பிடி உணவையும் தன் வயிற்றைப் பட்டினியாக்கி பிள்ளைக்காக கொண்டுவந்து கொடுக்கவும் தாயால் மட்டுமே முடிகிறது.
ஒரு ஜீவன் தைரியமாய் இந்த உலகோடு போராடுகிறது என்றால், வெற்றிகளைத் தனதாக்குகிறது என்றால் அந்த வெற்றிகளுக்குப் பின்னாலும் அந்த தைரியத்திற்குப் பின்னாலும் தாயின் தட்டிக்கொடுப்பும் வழிகாட்டலுமே உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும் போது இந்தக் குழந்தை இப்படித்தான் வரும் என்பது தாய்க்குத் தெரியாது. ஆனாலும் அந்தக் குழந்தையை பாராட்டிச் சீராட்டி வளப்பதற்கு எந்த தாயும் தயங்குவதில்லை.
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலே
என்னென்ன நினைச்சிருப்ப,
வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில் நீ சுமந்ததில்ல,
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆனதிங்கே.
எனக்கொண்ணு ஆனதுன்னா
உனக்கு வேறு பிள்ளையுண்டு,
உனக்கொண்டு ஆனதுன்னா
எனக்கு வேறு தாயிருக்கா?
இது கவிப்பேரரசின் வரிகள். தாயைப் போற்றும் இந்த வரிகள் காதில் நுழைந்து உள்ளத்தில் தேனூற்றுகின்றன. ஒவ்வொரு தாயும் ஓராயிரம் ஆசான்களுக்குச் சமனானவள். ஒரு குழந்தையின் அறிவு என்பது தாயிடம் தான் ஆரம்பிக்கின்றது. அதாவது, ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாயாகவே உள்ளார். தாயின் சமையல்கூடம் தான் பிள்ளையின் அறிவுத்திறன் ஆரம்பிக்கும் முதலிடம்.
தாய் மனம் என்பதில், இந்தக் காலத்தில் விதிவிலக்கும் இருக்கத்தான் செய்கிறது. அன்றாட செய்திகளில் பிறந்த சிசுவின் சடலம் வீதியில், என்றும் தவறான உறவுக்காக பிள்ளைகளைக் கொன்ற தாய் என்றும் செய்திகள் வராமல் இல்லை. இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் நிச்சயம் தாயாக இருக்கமுடியாது.
இன்றைய காலத்தில் பெருகிவிட்ட முதியோர் இல்லங்கள் எமக்கு ஒரு சேதி சொல்கின்றன. அதாவது நாம் குழந்தையாக இருக்கும் போது பாலூட்டி, சோறூட்டி, எமக்கு சின்தாய் அடிபட்டாலும் தான் துடித்து, தன் நித்திரையைத் தொலைத்து எம்மை வளர்க்கும் தாயை அவரது முதுமைக் காலத்தில் குழந்தையாக்கிப் பார்க்க நாம் முன்வருவதில்லை என்பதே அச்செய்தியாகும்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். ஒரு தாய்க்கு மகனாகவோ மகளாகவே இருப்பதைக்காட்டிலும் நூறு தாய்க்கு பிள்ளையாக வாழவேண்டும் என எண்ணுங்கள். அந்த எண்ணமே உங்கள் மனதில் ஆயிரம் மடங்கு அன்பினை அள்ளித்தரும். பெற்றால் தான் பிள்ளையா?
அன்னையைப் போற்றினால் அகிலமும் வசப்படும். அறம் என்பது அதனையன்றி வேறில்லை.
கோபிகை
தமிழருள் ஆசிரியர் பீடம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மவை வணங்காமல் உயர்வில்லையே!!
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறேது ……
எனத் தொடர்கிறது அன்னையைப் போற்றும் சொல்லாடல்.
அம்மாவைவிட உலகில் உயர்வுகள் வேறேதும் இல்லை என்பதே சாராம்சம். அம்மா என்பவள், உயிர்களின் ஜனிப்பில் தன்னைக் கரைப்பவள். பெண் பிறவி என்பதே பேறு பெற்றதுதான். உலகப் படைப்புகளில் உன்னதமானது பெண்பிறப்பு என்பதற்கு கவிஞர்களின் வார்த்தைகளும் சான்று பகிர்கின்றன. உறவுகள், நட்புகள் என அடுத்தவர்க்காய் மலர்வதற்காகவும் மகிழ்வதற்காகவும் தேய்ந்து போவதே பெண்ணின் இயல்பு. அதிலும் பெண்ணவள் தாயாகிவிட்டால் சொல்லவும் வேண்டுமோ? தாய்மைக்குப் பின்னான பெண்ணின் மாற்றம் என்பது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கொள்ளப்படவேண்டியது.
அணைக்கின்ற இயல்பு கொண்டவள் அன்னை. அன்னையாவதற்கு ஒரு குழந்தையைப் பிரசவிக்க வேண்டும் என்பதில்லை. அன்பு, கருணை, இரக்கம், நீடிய சாந்தம், பொறுமை என அனைத்து தாய்மை உணர்வுகளும் கொண்டவள், நிச்சயம் அன்னையே.
ஒரு குழந்தையைப் பிரசவிக்காமலே அன்னை எனப்போற்றப்பட்டவர்கள் பலரை நாம் வரலாற்றில் காண்கின்றோம். தாதியச் சேவையை கனிவுடன் ஆற்றி , அன்பான வார்த்தைகளால் காயமுற்றோரைத் தேற்றி, உலகம் முழுவதும் தாதியத்தின் தாயாகப் போற்றப்படுபவர் அன்னை புளோறன்ஸ் நைற்றிங்கேல். செல்வச் சீமாட்டியான இவரது மனதிலே உதித்த இரக்கமும் கருணையும் இவரை உலகத்திற்கே தாயாக்கியது. அப்போதைய போர்க்காலத்தில், காயமுற்றிருந்த வீரர்கள், இவரது வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பர் என்றும் அவரது வார்த்தைகளின் கனிவில் தமது வலியைக்கூட மறந்திருந்தனர் என்றும் கூறுகின்றது வரலாறு.
அன்னை தெரேசா உலகமே அறிந்த உத்தம தாய். இவர் கருவுற்று அன்னையாகாமல் கருணையுற்று அன்னையானவர். உலகத்தின் அழகான பெண் யாரென்றால், அதுவும் அன்னை தெரேசாதான். சேரி மக்களின் மனங்களில் எல்லாம் தெய்வமாகி நின்ற அவர், 'அருவருப்பு' என்பதைப் புறந்தள்ளிவிட்டு எல்லோரையும் கருணையோடு நோக்கியவர். வலிகளையும் அவமானங்களையும் பொறுத்து, சேரிவாழ் மக்களுக்காகவும் இயலாதவர்களுக்காகவும் பாடுபட்டு உழைத்தவர்.
தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது தன் பிள்ளைக்கென ஒதுக்கும், மனம் தாய்க்கு மட்டுமே உண்டு. தான் படிப்பறிவற்றவளாய் பாமரப் பெண்ணாய் இருந்தாலும் தன் பிள்ளை மட்டும் அறிவாளியாய் இருக்கவேண்டும் என கனவு காணவும் அதற்காக கடின வலிகளோடு போராடவும் பிள்ளைக்காய் பசி பொறுக்கவும் கையில் கிடைக்கும் ஒரு பிடி உணவையும் தன் வயிற்றைப் பட்டினியாக்கி பிள்ளைக்காக கொண்டுவந்து கொடுக்கவும் தாயால் மட்டுமே முடிகிறது.
ஒரு ஜீவன் தைரியமாய் இந்த உலகோடு போராடுகிறது என்றால், வெற்றிகளைத் தனதாக்குகிறது என்றால் அந்த வெற்றிகளுக்குப் பின்னாலும் அந்த தைரியத்திற்குப் பின்னாலும் தாயின் தட்டிக்கொடுப்பும் வழிகாட்டலுமே உள்ளது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு குழந்தை பிறக்கும் போது இந்தக் குழந்தை இப்படித்தான் வரும் என்பது தாய்க்குத் தெரியாது. ஆனாலும் அந்தக் குழந்தையை பாராட்டிச் சீராட்டி வளப்பதற்கு எந்த தாயும் தயங்குவதில்லை.
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலே
என்னென்ன நினைச்சிருப்ப,
வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில் நீ சுமந்ததில்ல,
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆனதிங்கே.
எனக்கொண்ணு ஆனதுன்னா
உனக்கு வேறு பிள்ளையுண்டு,
உனக்கொண்டு ஆனதுன்னா
எனக்கு வேறு தாயிருக்கா?
இது கவிப்பேரரசின் வரிகள். தாயைப் போற்றும் இந்த வரிகள் காதில் நுழைந்து உள்ளத்தில் தேனூற்றுகின்றன. ஒவ்வொரு தாயும் ஓராயிரம் ஆசான்களுக்குச் சமனானவள். ஒரு குழந்தையின் அறிவு என்பது தாயிடம் தான் ஆரம்பிக்கின்றது. அதாவது, ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாயாகவே உள்ளார். தாயின் சமையல்கூடம் தான் பிள்ளையின் அறிவுத்திறன் ஆரம்பிக்கும் முதலிடம்.
தாய் மனம் என்பதில், இந்தக் காலத்தில் விதிவிலக்கும் இருக்கத்தான் செய்கிறது. அன்றாட செய்திகளில் பிறந்த சிசுவின் சடலம் வீதியில், என்றும் தவறான உறவுக்காக பிள்ளைகளைக் கொன்ற தாய் என்றும் செய்திகள் வராமல் இல்லை. இவ்வாறான மனநிலை கொண்டவர்கள் நிச்சயம் தாயாக இருக்கமுடியாது.
இன்றைய காலத்தில் பெருகிவிட்ட முதியோர் இல்லங்கள் எமக்கு ஒரு சேதி சொல்கின்றன. அதாவது நாம் குழந்தையாக இருக்கும் போது பாலூட்டி, சோறூட்டி, எமக்கு சின்தாய் அடிபட்டாலும் தான் துடித்து, தன் நித்திரையைத் தொலைத்து எம்மை வளர்க்கும் தாயை அவரது முதுமைக் காலத்தில் குழந்தையாக்கிப் பார்க்க நாம் முன்வருவதில்லை என்பதே அச்செய்தியாகும்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். ஒரு தாய்க்கு மகனாகவோ மகளாகவே இருப்பதைக்காட்டிலும் நூறு தாய்க்கு பிள்ளையாக வாழவேண்டும் என எண்ணுங்கள். அந்த எண்ணமே உங்கள் மனதில் ஆயிரம் மடங்கு அன்பினை அள்ளித்தரும். பெற்றால் தான் பிள்ளையா?
அன்னையைப் போற்றினால் அகிலமும் வசப்படும். அறம் என்பது அதனையன்றி வேறில்லை.
கோபிகை
தமிழருள் ஆசிரியர் பீடம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை