ஒருதொகை தங்கம் பறிமுதல்!!!

சூடானில் விமானத்தில் கடத்தப்பட்ட ஒருதொகை தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சூடான் துணை இராணுவ அதிகாரிகளினால் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்தோம் நகரில் தரையிறங்கிய விமானத்திலிருந்து குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது சுமார் 240 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கத்தை ஏற்றுமதி செய்த மொரோக்கோ நிறுவனம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சூடானில் ஆண்டு தோறும் சுமார் 100 டன் தங்கம் உற்பத்தியாகிறது. அதை உற்பத்தி செய்பவர்கள் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் விதத்தில் சுமார் 70 சதவீத தங்கத்தை வெளிநாட்டிற்குக் கடத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உற்பத்தியாகும் தங்கம் மத்திய வங்கியிடம் உள்ளூர் நாணய மதிப்பில் விற்கப்படவேண்டும் என்ற விதி சூடானில் நடப்பில் உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.