நிவாரண நிதியை வழங்கியது தமிழக அரசு!!!

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்த காசோலை இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாட்டு அரச நிதித்துறை  தலைமை செயலாளர் சண்முகம் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித்குமார் மொஹந்தியிடம் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை கருத்திற்கொண்டு ஒடிசா மாநில அரசுக்கும் ஒடிசா மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசு மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 கோடி நிவாரண நிதி உதவியை வழங்க அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையின் படி புயல் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.