குளியாப்பிட்டியவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது!!

குளியாப்பிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் காணப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் மீது இனந்தெரியாத குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தியிருந்தது. இதனையடுத்து அமைதியை ஏற்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

குறிப்பாக, தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்தவர்களை உடனடியாக பொலிஸார் விடுவிக்க வேண்டுமென கூறி பெரும்பாலானோர் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட காரணத்தினாலேயே அப்பகுதியில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.