சாபமிட்ட பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!!

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று பயங்­க­ர­வா­தி­களின் குண்­டுத் ­தாக்­கு­தல்கள் இடம் பெறக்­கூ­டிய ஆபத்து இருக்­கின்­றது என்ற தக­வல்­களை முன்­கூட்­டியே தெரிந்­தி­ருந்தும் அதை அலட்­சி­யப்­ப­டுத்­தி­ய­மைக்கு நாட்டின் தலை­வரும் அதி­கா­ரி­களும் பொறுப்­புக்­கூற வேண்டும் என்று கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை தெரி­வித்­துள்ளார்.


கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற குண்­டுத் ­தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் நினை­வாக இரங்கல் திருப்­பலி கொழும்பு கொட்­டாஞ்­சேனை புனித லூசியாஸ் பேரா­ல­யத்தில் நேற்­று­முன்­தினம் சனிக்­கி­ழமை காலை பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் இடம் பெற்­றது.

அதில் மறை­யு­ரை­யாற்­றிய கர்­தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மேலும் தெரி­வித்­த­தா­வது, பொறுப்­புக்­களை அலட்­சியம் செய்­த­வர்­க­ளுக்கு வழங்­கக்­கூ­டிய தண்­டனை அவர்­களை பதவி நீக்­கு­வ­தே­யாகும். இது­போன்ற பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முடி­யா­த­வர்கள் நாட்டின் தலை­வர்­க­ளாக இருக்க தகு­தி­யற்­ற­வர்கள் ஆவர்.

தெய்­வத்தின் முன்­னி­லையில் மண்­டி­யிட்டு வேண்­டுதல் செய்­த­வர்­களை கொடூ­ர­மாக கொலை செய்­த­வர்­க­ளுக்கு இறை­வனின் தண்­டனை நிச்­சயம் உண்டு.

புனித அந்­தோ­னி­யாரின் எழில் மிகு ஆல­யத்தை அப்­பாவி மக்­களின் இரத்­தக்­க­றையால் தோய்த்து அந்த புனி­தரை அகௌ­ரவப்படுத்­தி­ய­வர்கள் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்ப முடி­யாது. அவர்­க­ளுக்கு தண்­டனை நிச்­சயம்.

அதே­வேளை, ஈஸ்டர் தினத்தில் தெய்­வத்தை தரி­சிக்க சென்­ற­வர்­களை அழித்­தொ­ழிக்கும் சம்­பவம் தொடர்பில் ஏற்­க­னவே அறிந்­தி­ருந்தும் அத­னைத் ­த­டுக்­காது புனி­தர்­களை போல் செயற்­ப­டு­ப­வர்கள் மீதும் இறை தண்­டனை உண்டு.

பொறுப்­பற்ற விதத்தில் செயற்­பட்ட நாட்டின் தலை­வர்கள் மற்றும் அதி­கா­ரிகள் பதவி நீக்­கப்­பட வேண்டும். கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் குண்டுத் தாக்­கு­தலில் பலி­யான அனை­வ­ரையும் நான் அன்­புடன் நினைவு கூரு­கின்றேன். அவர்­களை இழந்து துய­ருறும் குடும்­பங்­க­ளுக்கு எனது ஆழ்ந்த அனு­தா­பத்தைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

இதே­போன்று இந்த சம்­ப­வங்­களில் காய­ம­டைந்­த­வர்கள் விரை­வாக குண­ம­டை­வ­தற்கு எனது ஆசியை வழங்­கு­கின்றேன்.

இந்த நாட்டில் சமா­தா­ன­மா­கவும் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் வாழ்ந்த மக்­க­ளுக்கு ஏன் இப்­ப­டி­யான துயரம் நிகழ்ந்­த­தென்று கேட்க விரும்­பு­கின்றேன்.

சம்­பவம் நடந்த தினம் நான் உட­ன­டி­யாக கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு வந்தேன். எனினும் பாது­காப்புப் படை­யினர் என்னை உள்ளே செல்ல அனு­ம­திக்­க­வில்லை. அங்கு மேலும் குண்­டுகள் வெடிக்­கலாம் என என்னை வாக­னத்தில் ஏற்றி அனுப்பிவிட்­டனர்.

அவ்­வாறு நான் வாக­னத்தில் ஏறி­ய­ பின்பே நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்டி ஆல­யத்­திலும் குண்டு வெடித்­த­தாக எனக்கு தொலை­பேசி அழைப்பு வந்­தது. நான் அப்­போது அதிர்ச்­சியில் நிலை­குலைந்து போனேன்.

அன்று ஈஸ்டர் தினம் என்­பதால் புனித அந்­தோ­னியார் ஆல­யத்­திற்கு சென்­ற­வர்கள் இறை­வனின் மீதும் புனித அந்­தோ­னியார் மீதும் அதீத விசு­வா­சமும் நம்­பிக்­கையும் கொண்­ட­வர்கள். முழந்தாள் படி­யிட்டு இறை­வனை வணங்­கி­ய­வர்கள் தமக்கு இவ்­வாறு நிகழும் என ஒரு­போதும் நினைத்­தி­ருக்க மாட்­டார்கள்.

இது இறை­வனின் விருப்­பத்தில் இடம்பெற்­ற­தல்ல. மனி­தனின் செயற்­பாட்டால் இடம்பெற்­றது. நான் இதனை கேட்­டதும் தாங்க முடி­யாத துயரில் ஆழ்ந்தேன்.

ஆல­யத்தில் இறை­வனை வணங்­கப்­போ­ன­வர்­களை இவ்­வாறு கொடூ­ர­மாக கொலை­ செய்­ததேன்? இதற்கு பதில் கிடைக்­க­வில்லை. பெற்­றோர்கள், குழந்­தைகள் , உற­வி­னர்கள் என எதிர்­கா­லத்­தைப்­பற்­றிய பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் வாழ்ந்­த­வர்­களை கொலை செய்­த­வர்­க­ளுக்கு எம்மால் ஒன்றும் செய்ய முடி­யாது.

எனினும் இறை­வனின் தண்­டனை நிச்­சயம் உண்டு. இந்த கோர சம்­பவம் இடம் பெறு­வதை முன்­னரே தெரிந்­தி­ருந்­த­வர்கள் இதற்­கு பொறுப்பு கூற வேண்டும்.

தெரிந்­தி­ருந்தும் அலட்­சி­ய­ம் செய்த தலை­வர்­களும் அதி­கா­ரி­களும் இதற்­கு ­பொ­றுப்­புக்­கூ­ற­ வேண்டும்.

இத­னைச்­ சி­றி­ய­தொரு விட­ய­மா­கக்­க­ருதி கைக­ழுவி விட முடி­யாது. குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை கிடைக்க வேண்டும். அவர்­க­ளுக்கு நாம் தண்­டனை வழங்க வேண்டும். அந்த தண்­டனை அவர்­களை அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கு­வதே ஆகும்.

இதுபோன்ற பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முடி­யா­த­வர்கள் நாட்டின் தலை­வர்­க­ளாக இருக்க தகு­தி­யற்­ற­வர்கள்.

அவர்­களை பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும். இது ஒரு வஞ்­ச­க­மான செயற்­பாடு. இது தவிர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­யது. எனில், ஏன் அதை அவர்கள் தடுக்­க­வில்லை என கேட்க விரும்­பு­கின்றேன்.

இதைச்­செய்­த­வர்கள், அத­னோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தாம் எத­னையும் செய்­யா­த­வர்கள் போல் புனி­தர்­க­ளைப்போல் உள்­ளார்கள். இந்த பாவச்­செ­ய­லி­லி­ருந்து தப்­பி­வி­டலாம் என நினைப்­பது தவறு. அவர்­க­ளுக்கு இறை­வனின் தண்­டனை கிடைப்­பது உறுதி.

மேலும், ஆலயத்தில் ஓடிய இரத்த ஆறு அன்று கடவுள் முன்னிலையில் காயீன் -ஆபேல் சம்பவத்தில் இறைவன் முன்னிலையில் சிந்திய இரத்தத்திற்கு சமமாகும். இந்த இரத்தம் இறைவனின் செவிகளில் ஓங்காரமிடும். அவரது தீர்ப்பு கிடைப்பது உறுதி என அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.