மும்பை வெற்றி குறித்து சச்சின் டெண்டுல்கர்!!

ராகுல் சஹாரை சொல்லியே ஆக வேண்டும். முதல் போட்டியிலேயே அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தைக் கொடுத்தார்” என சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.


ஐபிஎல் 12வது சீஸனின் ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நூலிழையில் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஒவ்வொரு முறையும் மும்பை - சென்னை அணிகள் மோதும்போது பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நேற்று நடந்த ஃபைனல் ஆட்டமும் இறுதிப் பந்துவரைச் சென்றது. ஹர்திக் வீசிய ஆட்டத்தின் 13-வது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தோனி அவுட் ஆக மொத்த டீமும் அதிர்ச்சியில் உறைந்தது. 8 பந்துகள் பிடித்த தோனி 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்த ரன் அவுட் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

ரீப்ளேவில், தோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது. பல கேமரா கோணங்களில் பார்த்த பின்னர், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு கொடுக்கப்படும் வேளையில் இப்படி அவுட் கொடுக்கப்பட்டது ஏன் என சென்னை ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தோனி அணியைக் காப்பாற்றுவார் என நினைத்த வேளையில் இப்படி ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் இந்த ரன் அவுட் தொடர்பான புகைப்படங்களைப் பதிவிட்டு விவாதம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை அணியின் ஐகான் சச்சின் டெண்டுல்கர், ``ஆட்டத்தின் முக்கிய தருணமே தோனியின் ரன் அவுட் தான். அதுதான் மும்பை அணிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதேபோல் இக்கட்டான நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக மலிங்கா வீசிய 16வது ஓவருக்குப் பிறகு வீசிய பும்ரா பேட்ஸ்மேனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதற்கடுத்து குர்னால் பாண்டியா வீசிய ஓவரில்கூட அதிக ரன்கள் சென்ற பிறகும் அடுத்த ஓவரில் பும்ரா வெகுவாக கட்டுப்படுத்தினார். மலிங்கா சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார். கடைசிக் கட்டத்தில் அவரது பௌலிங் நன்றாக இருந்தது. ஒரு சில இறுதிப்போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். ஒரு பயங்கரமான அணி எங்களுக்குக் கிடைத்துள்ளது. அனுபவமும் அதேநேரம் இளைஞர்கள் நிறைந்த அணியாகவும் கிடைத்துள்ளது.

ராகுல் சஹாரை சொல்லியே ஆக வேண்டும். முதல் போட்டியிலேயே அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தைக் கொடுத்தார். அவர் நல்ல திறமையான வீரர் என அப்போதே தெரிந்துவிட்டது. 6 டு 15வது ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இவர் நெருக்கடியான போட்டிகளில் தரமான பௌலிங்கை கொடுக்கிறார். அணியின் மற்ற ஸ்பின்னர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும், இந்தத் தொடர் முழுவதுமே ஹர்திக் பாண்டியா அணிக்காக சில நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்தினார். இது அணிக்கு மிகவும் கைகொடுத்தது" எனக் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.