வெடிங் டேயை வித்தியாசமாக கொண்டாடிய ராஜாராணி ஶ்ரீதேவி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `ராஜா-ராணி' சீரியலின் சில எபிசோடுகள் சிங்கப்பூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை `ஶ்ரீதேவி, ஆலியா, `மானசா' சீரியலுக்காக சிங்கப்பூரில் பங்கி ஜம்ப் செய்துள்ளனர். இந்தப் புதுமையான அனுபவம் குறித்து ஶ்ரீதேவியிடம் பேசினோம்.


சீரியலின் சில எபிசோடுகள் சிங்கப்பூரில் எடுக்க முடிவு செய்யப்பட்டதுமே, சிங்கப்பூரில் சிறப்பு பெற்ற எல்லா இடங்களையும் கதைக்குள் கொண்டுவரனும்னு டைரக்டர் சொல்லிட்டார். அந்த லிஸ்டில் மலையின் உச்சியில் இருந்து பாதுகாப்பு ரோப்புகளுடன் கீழே குதிக்கக்கூடிய பங்கி ஜம்ப் டாஸ்க்கும் இருந்துச்சு.``யாரையும் கட்டாயப்படுத்தல.. விருப்பம் இருக்கவங்க பண்ணுங்க, அதை அப்படியே சீரியலுக்காக ஷூட் பண்ணிக்கலாம்"னு டைரக்டர் சொல்ல நானும் ஆலியாவும் ரெடி ஆயிட்டோம். சீரியலில் நாங்க ரெண்டு பேரும் பங்கி ஜம்பில் போட்டி போட்டுக்கிற மாதிரி கதையும் வைச்சுட்டாங்க. பங்கி ஜம்ப் ஆசை நீண்ட நாளாக மனசுக்குள் இருந்தாலும், அவ்வளவு உயரத்தில் இருந்து பூமியை பார்க்கும்போது மனசு பதற்றமாயிருச்சு. மனசை ரிலாக்ஸ் பண்ணி கண்களை மூடிட்டு கீழே குதிச்சுட்டேன்.

உயரத்தில் இருந்து தரையை நோக்கி போகப் போக பயமெல்லாம் குறைஞ்சு ஹேப்பி மோடுக்கு மாறி நல்லா என்ஜாய் பண்ணேன். உலகமே கையில் இருக்கிற மாதிரி இருந்துச்சு. என் கணவரும் என்கூட வந்திருந்தார். அவரையும் பங்கி ஜம்ப் பண்ண வைச்சுட்டேன். இன்னோரு சீக்ரெட் சொல்லவா... அன்னைக்குதான் எங்களோட முதல் திருமண நாள்.பங்கி ஜம்ப்,ராட்சச ஊஞ்சல் ஏற்றம்னு  ரொம்ப வித்தியாசமாக வெடிங் டேயை கொண்டாடியாச்சு.இப்படி ஒரு புது அனுபவம் கொடுத்த டைரக்டருக்குத் தான் நன்றி சொல்லணும்" என்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.