விடுதலைப்புலிகளுக்கான தடையை நீடித்தது மத்திய அரசு!

இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி குறித்த அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்களின் காரணமாக இந்தியாவின் அமைதிக்கும் , இறையான்மைக்கும் குந்தம் ஏற்ப்படகூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதால் தடைநீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.