ரிஷாட்டுக்கு எதிரான ஆதாரங்கள் உண்டு! – அத்துரலிய ரத்தன தேரர்!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளமைக்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


அத்தோடு போதிய ஆதாரங்கள் இருப்பதன் காரணமாகவே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை பொது எதிரணியின் சார்பில் கொண்டுவந்தால், அது மேலும் பெறுமதியானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் அவர் சபாநாயகரிடம் பிரேரணையை கையளித்துள்ளதாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.