பாவாலி கிராமம் பொக்கிஷமாகப் பாதுகாக்கும தாமிரப் பட்டயம்!

விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமம் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த 72 பாளையங்களில் ஒன்று. இங்கே தொன்மையான கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
அதில் ஒன்றுதான் 1799-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு தொடர்பான தாமிரப் பட்டயம்.

ஆங்கிலேயருக்கு எதிரான வீரபாண்டிய கட்டபொம்மன் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. மெசர்பானர்மேன் துரை உத்தரவிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான ஆங்கிலேயர் காலத்து பட்டயத்தை அந்த கிராம மக்கள் இன்றும் பாதுகாத்து வருகின்றனர்.

மெசர்பானர்மேன் துரையின் அந்த உத்தரவில், வீரபாண்டிய கட்டபொம்மன், தனாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, நாகலாபுரம் பாளையக்காரர் மகன் சவுந்திரபாண்டியன் ஆகியோரைக் கொலை செய்ய உத்தரவிட்டார்.

பாளையக்காரர்கள் பீரங்கி, ரேக்குகள், கொடிமரம், கத்தி, ஈட்டி வைத்திருந்தால் அவர்களின் பாளையப்பட்டுகள் பறிக்கப்பட்டு கும்பனிக்கு எதிரியாக்கித் தண்டிக்கப்படுவர். பாளையப்பட்டில் உள்ள சேவைக்காரர்கள், குடியானவர்கள், காவல்காரர்கள் கல்வெடி, திரிவெடி, ஈட்டி, வல்லையம், பிடிகத்தி போன்ற ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தாலும் பாளையக்காரர்களே தண்டிக்கப்படுவர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தால் அவர்கள் கொல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் வரலாற்றை எடுத்துச் செல்லும் வகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த அந்தத் தாமிரப் பட்டயத்தை அப்படியே கல்லில் பதித்து வைத்துள்ளனர். அந்தப் பட்டயத்தைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.