போதைப்பொருள் கடத்தல் – யாழில் மூவர் கைது!!

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து நேற்று (புதன்கிழமை) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பு ஊடாக படகில் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்றபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சான்றுப்பொருற்களுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.