யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை!!

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை இன்று (வியாழக்கிழமை) காலை முதல் முன்னெடுத்தனர்.

எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெறவிருப்பதால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின்கீழ் நாநூற்று ஐம்பது இராணுவத்தினர் மற்றும் தொண்ணூறு பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இச்சோதனை நடவடிக்கைகளை பதிவு செய்யச் சென்ற கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.