முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலி உறுப்பினரின் உடலம் நீதவான் முன் தோண்டி எடுக்கப்பட்டது!📷

சட்டவைத்திய அதிகாரி ,மற்றும் தடயவியல் பொலிசார், மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .
மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கிரோக்கி ஒன்றின் சிதைவுகள், இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி ஆகியனவும் மீட்கப்பட்டன.
இந்த உடலை சிதைவில் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை