வேங்கையாய் நிமிர்ந்து மனதினில் நிறைந்தவள் எங்கள் இசைப்பிரியா!! 📷

அவள் குரல் ஒலித்தால்தான்
ஈழம் விடியும்
என்று இருந்த காலம் ஒன்று
இருந்தது அதை..
அழித்து விட்டார்களே
சிங்கள இனப்பேய்கள் .. 
             

 இசைபிரியா அக்காவின் மே 17 பிறகு வெளிவந்த புகைப்படங்களை இனி பதிவிடாதிர்கள்,  அவர்கள் அம்மாவும் ஒரு பழைய காணொளியில் அழுததை இன்று கண்டேன்.  சேனல் 4ஊடகவியலர்களுக்கு அளித்தபேட்டியில் கண்ணீருடன் கெஞ்சுகிறார்கள்,  ஒருமுறை இறந்த அவளை நீங்கள் ஆடையற்றநிலையில் பல முறை பதிவுசெய்கிறீர்கள்,  நியாமா ,என்று?

 அதைப் பார்த்து அதிகமாக அழுதுவிட்டேன்,  இசை அக்காவின் தங்கையும் இசைபிரியா போலவே ஒத்த முகமுடையவர்கள்.  அவள் தங்கை திருமணவாழ்க்கையும் பாதிக்கப்படும்.  அவர்கள் கனடாவில் அகதியாக வாழ்கின்றார்கள், இனி அந்த புகைபடங்களை பதிவிடவேண்டாம் உறவுகளே,

இன்று மே 17 இசை அக்கா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி அம்மாவிடம் கொடுத்து காயம்பட்ட விடுதலைபுலிகளின் மருத்துவசெலவுக்கு கொடுத்துவிட்டு சரணடைந்தநாள்,  இன்று செய்திவாசித்தவள் செய்தியாகிபோனாள்.
இசைப்பிரியா (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப்  பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம் நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர்.

மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள், வளர்ந்து சிறுமியானாள்.  அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலவரோடும் அழகு, பதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல்,  பள்ளித் தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன.

இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கேளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.
இரக்ககுணத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள் .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.  ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர்.

சோபனா ஐந்தாம் ஆண்டு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன் வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர்,  யாரவது துன்பப்படுவதைப்  பார்த்தால் மனமிரங்கி ஓடிசென்று அவர்களுக்கான உதவிகளை செய்து விடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள்.அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.

புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளீரி கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால்.அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில்(1995 ) ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான்.தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும் துன்புறுத்தியும் படுகொலை செய்தான்.உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்ரோடு நடந்தும் ஓடியும் விழுந்தும் எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள்.அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒரு வழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.

சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன் கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள்.தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம்,  ஆதனால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள்.(1999 ) ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.
இசைப்பிரியா நினைவில்...


இயக்கத்தில் இணைந்து கொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்த கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது.இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்க போகின்றது என்பது தெரிந்தோ என்னவோ இசையருவி என பெயர் சூட்டப்பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்சிகளை முடித்தாள்.சோபனா,தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள்.இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவு செய்ய வைத்தது.இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..


நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுகபடுத்தினாள்.கண்ணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம் பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காக உருவாக்க படும் ஒளிவீச்சு,  காணொளி சஞ்சிகையின் நிகழ்வுக்கு தலைமை தாங்கினாள். தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவள். கணீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர்.இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார்.இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சோடு  மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊராய் சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கிருந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.