இராணுவத்தினர் மீது போர் குற்றங்களை சுமத்தமுடியாது என்கிறார் கோட்டா!!
தீவிரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினர் மீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, தீவிரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினர் மீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது என தெரிவித்த அவர், மனித உரிமைகள் போன்று தேசிய பாதுகாப்பும் முக்கியத்துவமானது என்று குறிப்பிட்டார்.
மேலும், தேசிய பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையானது எனவும், தேசிய பாதுகாப்பு இன்றி, சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்றும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
தேர்தல் மட்டுமல்லாது, நாட்டுக்கும் இனங்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் தான் அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் கட்டாயம் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, தீவிரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினர் மீது போர்க்குற்றங்களை சுமத்த முடியாது என தெரிவித்த அவர், மனித உரிமைகள் போன்று தேசிய பாதுகாப்பும் முக்கியத்துவமானது என்று குறிப்பிட்டார்.
மேலும், தேசிய பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படையானது எனவும், தேசிய பாதுகாப்பு இன்றி, சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்றும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்,
தேர்தல் மட்டுமல்லாது, நாட்டுக்கும் இனங்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் தான் அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் கட்டாயம் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை