யாழ் பண்ணை வீதியில் விபத்து!!

யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


மண்டைதீவு சந்திக்கு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மூவர் சாட்டிக் கடற்கரைக்கு காரில் சென்று திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றது என எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மேலும் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துள்ளானது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.