ஈழத்து படைப்பாளியின் நூல் அறிமுக விழா!!

பொறியியலாளரும்,ஈழத்துப் படைப்பாளியுமான  சிறைக்கம்பிக்குள் வலியைச் சுமந்து வாழ்கின்ற திரு .சிவ.ஆரூரன் அவர்களின் பன்னிரண்டு சிறுகதைகளடங்கிய "பூமாஞ்சோலை" சிறுகதைத்தொகுப்பு நூல்அறிமுகம்  19.05.2019 இன்று சுவிஸ் பேர்ண் "சைவநெறிக்கூட" ஆதரவில்
"தமிழர் களறி"ஏற்பாட்டில் நடைபெற்றது...


எழுத்தாளர் திரு.சிவ.ஆரூரன் அவர்கள் "யாழிசை"என்ற நாவலை 2015 ஆம் ஆண்டிலும் ,
"யாவருங்கேளிர்"என்ற நாவலை 2017ஆம் ஆண்டிலும் வெளியீடு செய்தமை குறிப்பிடத்தக்கது. ..

இவ்விரு நாவல்களில் "யாழ்இசை" எனும் நாவல்"சாகித்தியவிருது" பெற்றமை சிறப்பம்சமாகும்.....

புலம்பெயர் தேசத்தில் 19.06.2019 இன்று அறிமுகமான இந்நூலின் மதிப்பீட்டுரையை திரு.ஊரும்பையூர் திலக் நிகழ்த்தி நூலினை வெளிட்டுவைத்ததுடன்  தொடர்ந்து
தமிழின உணர்வாளரும்,கவிப்பாவலருமான
பேராளர் மதிப்புக்குரிய திரு.அறிவுமதி  அவர்களுக்கு நூலின் பிரதியை வழங்கிவைத்தார்.



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.