தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 80ற்கும் மேற்பட்டவர்கள் கைது!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 80 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


அந்தவகையில் இதுவரை சுமார் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என பொலிஸார் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.