ஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.


இவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள தேவாலயங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பாகவுள்ள குறித்த இரு அதிகாரிகளும் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விரைவில் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளனர். அத்தோடு இவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.