அழிக்கப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாத முகாம்!!

ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக்கி வைக்கும் முகாமொன்றை இராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த முகாம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலை அடுத்து அங்கு கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனையடுத்து முகாமிலுள்ள ஏராளமான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் கடுமையான இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.