மன்னாரில் இருவர் கைது!!

மன்னார், பள்ளிமுனை கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட இருவரும் கற்பிட்டி மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து தமிழ் மக்களின் கிராமங்களில் அச்சநிலை ஏற்பட்டுள்ளமையினால் கிராம மக்களும் விழிர்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் பள்ளிமுனை தேவாலய நிர்வாகத்துடன் இணைந்து கிராம மக்கள் இரவு நேரங்களில் தமது கிராமத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 11.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் பள்ளிமுனை கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளனர்.

இதனால் குறித்த இருவர் மீதும் சந்தேகம் கொண்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை பிடித்து விசாரணைகளை மேற்கொண்டபோது வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகையால் இவ்விடயம் குறித்து மன்னார் பொலிஸாருக்கு அப்பிரதேச மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.