சஹரானின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம் செல்கிறது!!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் சஹரான் ஹாசிமின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.


குறித்த அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சஹரான் என்பது குறித்த மரபணு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று ஷங்ரி–லா நட்சத்திர விடுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 36 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களில் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் சஹரான் ஹாசிமும் ஒருவர் என்றும் அவர் அத்தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

எனினும் அத்தாக்குதலில் உயிரிழந்தவர் அவர் இல்லையென புலனாய்வு தகவல்கள் தெரிவித்திருந்தன. இதனை உறுதி செய்வதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹரானின் சகோதரியின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு தீர்மானித்தது.

அதற்கமைய சஹரானின் மரபணு பரிசோதனைக்காக அவரின் மகள் மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் அண்மையில் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.