சாதனையில் ‘லூசிபர்’ திரைப்படம்!!
பிரித்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியாகிய ‘லூசிபர்’ திரைப்படம் தற்போது வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.
மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரைக்கு வந்து 8 நாட்களில் உலகம் முழுவதிலும் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகிருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களில் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை 25 நாட்களுக்கு முறியடித்துள்ளது ‘லூசிபர்’ திரைப்படம்.
சமீபத்தில் வெளியாகி 50 நாட்களை கடந்து இருக்கும் ‘லூசிபர்’ திரைப்படம், தற்போது 200 கோடி ரூபாய் எனும் மாபெரும் வசூல் சாதனைப்பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்துள்ளது.
அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார்.
இந்த சாதனையை நிகழ்த்த உதவிய உலகெங்கிலுமுள்ள சினிமா காதலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் மோகன்லால்.
பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் ‘லூசிபர்’ படத்தின் 2ம் பாகம் பற்றிய பேச்சு தற்போது எழுந்துள்ளது. இரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில் இதுபற்றிய கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் கதாசிரியர் முரளி கோபி, அதற்கான பதிலை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ”இரசிகர்களின் காத்திருப்பு நீண்ட நாட்கள் நீடிக்காது” என்று கூறியுள்ளார்.
இத்திரைப்படமே நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ள முதல் திரைப்படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தோமஸ், கலா பவன் சாஜன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரைக்கு வந்து 8 நாட்களில் உலகம் முழுவதிலும் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகிருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் 50 நாட்களில் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை 25 நாட்களுக்கு முறியடித்துள்ளது ‘லூசிபர்’ திரைப்படம்.
சமீபத்தில் வெளியாகி 50 நாட்களை கடந்து இருக்கும் ‘லூசிபர்’ திரைப்படம், தற்போது 200 கோடி ரூபாய் எனும் மாபெரும் வசூல் சாதனைப்பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்துள்ளது.
அரசியல் சாரம்சம் கொண்ட இந்தப் படத்திற்கான கதையை மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முரளி கோபி எழுதியிருந்தார்.
இந்த சாதனையை நிகழ்த்த உதவிய உலகெங்கிலுமுள்ள சினிமா காதலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் மோகன்லால்.
பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் ‘லூசிபர்’ படத்தின் 2ம் பாகம் பற்றிய பேச்சு தற்போது எழுந்துள்ளது. இரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில் இதுபற்றிய கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் கதாசிரியர் முரளி கோபி, அதற்கான பதிலை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ”இரசிகர்களின் காத்திருப்பு நீண்ட நாட்கள் நீடிக்காது” என்று கூறியுள்ளார்.
இத்திரைப்படமே நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ள முதல் திரைப்படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தோமஸ், கலா பவன் சாஜன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை