மாட்டுச் சாணத்தால் காரை மெழுகிய ஓனர்!!

வெயில் கொடுமையில் இருந்து தப்புவதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர், தனது காரை மாட்டுச் சாணத்தால் மெழுகிய சம்பவம் நடந்திருக்கிறது.


கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வழக்கமாக ஏப்ரல் இறுதியில் கோடைக்காலம் தொடங்குவதாகக் கூறப்பட்டாலும் நடப்பாண்டில் பிப்ரவரி இறுதி முதலே நாடு முழுவதும் வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். வெயிலில் இருந்து தப்ப மக்கள் பல்வேறு உபாயங்களை நாடுகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுவது அன்றாடக் கதையாகிவிட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அடுத்த சில நாள்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர், வெயிலில் இருந்து தப்புவதற்காகத் தனது காரை சாணத்தால் மெழுகிய சம்பவம் நடந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் இதுகுறித்து ரூபேஷ் கௌரங்க தாஸ் என்பவர் புகைப்படங்களைப் பகிரவே, அது வைரல் ஹிட்டடித்திருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் அகமதாபாத்தில் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ரூபேஷ், 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தனது கார் வெப்பமடையாமல் காத்துக்கொள்வதற்காக சீஜல் ஷா எனும் பெண்மனி, தனது காரை சாணத்தால் மெழுகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

 வெயிலில் இருந்து தப்ப, இப்படி விநோதமான முயற்சி, உங்களுக்குத் தெரிஞ்சு யாராவது எடுத்திருக்காங்களா?... உங்க கருத்துகளை கமெண்டில் பதியலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.