சாதி வெறியால் ஆலயத் திருவிழா நிறுத்தம்!!

கடந்த வருடம் வறணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் திருவிழாவில் குறைந்த சாதியினர்  தேர் இழுக்க கூடாது என்று சொல்லி JCB கொண்டு தேர் இழுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


இந்த நிலையில் இவ் வருட திருவிழாவை அனைத்து சமூகங்களும் இணைந்து ஒற்றுமையாக நடத்துமாறு தென்மராட்சி பிரதேச செயலகம்  அறிவித்திருந்த போதும் தங்களை உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்ளும் கீழ்த்தரமான சிந்தனையுள்ள சிலர் கோவில் திருவிழாவை நிறுத்தியுள்ளனர்.

இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் இன்று தென்மராட்சி பிரதேச செயலகம் முன் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.