ஆந்திராவில் கரைஒதுங்கிய சிறீலங்கா அதிவேக படகு !

இந்தியாவின் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கரையொதுங்கிய ஸ்ரீலங்காவினை சேர்ந்த  அதி வேகப்படகு ஒன்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


குறித்த படகில் சிகரட்டுகள் மற்றும் பீடியுடன், ஸ்ரீலங்கா உற்பத்தி செய்யப்பட்டதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தண்ணீர் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டத்தின் பத்துரு என்ற கிராமத்தில், மூன்று தினங்களுக்கு முன்னர் உள்ளுர் மீனவர்களால் குறித்த படகு அடையாளம் காணப்பட்டு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அதனை காவற்துறையினர் பரிசோதித்துள்ளனர்.

இதுதொடர்பில் மாநில புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் யாரும் குறித்த படகில் இந்தியாவிற்குள் பிரவேசித்திருக்கலாம் என்ற அச்சத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.