சமாதானத்தை முன்னிட்டு “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு !!

சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு “உத்தமாச்சாரய” (வணக்கம்) நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


பரமவீர விபூஷண பதக்கம் பெற்றோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் நூல்களை வழங்கி வைத்தார்.

சமாதானத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சல் உறையும் ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தினரால் மஹரகம அபேட்சா மருத்துவமனைக்கு வழங்கப்படும் 70 மில்லியன் ரூபாவுக்கான காசோலையினை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஜனாதிபதி அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினரின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.