தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் முடிவிற்கு வந்தது!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் இன்று (புதன்கிழமை) முடித்துவைத்தது.


இது குறித்து கருத்துதெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இழப்பீடு தொகைகளும், தமிழக அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் போன்ற நடவடிக்கைகளும் தங்களுக்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி கடந்த மே மாதம் மக்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்த கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடொன்றை அளித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், இது பற்றிய வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.