பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடமுடியாது – உயர்நீதிமன்றம்!!

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


இது குறித்த மனு  இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நாளை வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட குறித்த பகுதியில் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறைகளின் காரணமாக 200ற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.