ஜம்மு – காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் கோபால்போரா பகுதியில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் இரு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியதகவலுக்கு அமைய குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது.  இந்த  சண்டையில், இரு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து, குறித்த பகுதியில், பயங்கரவாதிகளின் செயற்பாடு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.