யுத்த வடுக்களற்ற வடக்கு விரைவில் உருவாகுமாம்!!

போருக்கு முன்னரான வளமான வடக்கு மாகாணம் மீண்டும் மிக விரைவில் உருவாகும் என, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.


யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த இரண்டு வருடங்களாக வடக்கு மாகாணத்தில் பணியாற்றியுள்ளேன். வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது பணிக் காலத்தின் முக்கிய நோக்கமாக விளங்கியது. அதன்படி, பெரும்பாலும் வடக்கில் சமாதானம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொலிஸாருக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கினர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தை யுத்தத்திற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வருவதே தற்போதைய நோக்கமாக உள்ளது.

அதன்படி, விரைவில் வட மாகாணத்தை பழைய செழிப்பான நிலைக்கு கொண்டு வருவோம். வட மாகாணம் பழைய நிலைக்கு திரும்பும்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.