இந்தோனேசிய ஜனாதிபதிக்கு எதிராக தொடரும் போராட்டம்!

இந்தோனேசிய ஜனாதிபதியாக மீண்டும் ஜொகோ விடோடோ தெரிவுசெய்யப்பட்டமையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (புதன்கிழமை) இரவு தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்றது.

தலைநகர் ஜகார்த்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களை நோக்கி தண்ணீர் பிரயோகம் மற்றும் கண்ணீரு; புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பண உறைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த போராட்டமானது திட்டமிட்டு பணம் வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு பணம் வழங்கி குழப்பத்தை விளைவிக்க முயற்சித்த நபர் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜகார்த்தா பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.