பிரகாஷ்ராஜ் பின்னடைவு!


முதன்முறையாக அரசியலில் களம் கண்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.



நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. முழுமையான வெற்றி, தோல்வி நிலவரங்கள் அதிகாரபூர்வமாக மாலைக்குப் பிறகே தெரியவரும் நிலையில் தற்போது வெளியாகும் முன்னிலை, பின்னடைவு நிலவரங்கள் அதைப் பறைசாற்றும் விதமாக அமையும் என்றே கூறலாம்.

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளைப் போலவே திரைப் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளும் கவனிக்கப்பட்டுவருகின்றன.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பின் தீவிரமாக மோடி எதிர்ப்பு நிலையை எடுத்துவரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் பேசிவருகிறார். பேசுவதோடு மட்டுமல்லாமல் பெங்களூர் மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக போட்டியிட்டார்.

1 மணி நிலவரப்படி பிரகாஷ்ராஜ் அங்கு 12,517 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரிஸ்வான் அர்ஷத் 2,71,875 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த பி.சி.மோகன் 2,51,349 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.