அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய போவதில்லை: ஈரான்!!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.


தம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படினும் தமது இலக்குகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான் – ஈராக் போர் நினைவுதினத்தை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், எமது பிராந்தியம் குண்டு வைத்து தகர்க்கப்படினும், எமது குடிமக்கள் காயமடையச் செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்படினும் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், பெருமைக்காகவும் நாம் எமது இலக்குகளை கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இவ்வொப்பந்தம் ஈரான் அணு ஆயுத செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகுக்கிறது.

இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தை பின்னுக்கு செல்ல வைத்தது. இதுவரை இல்லாத வகையில் ஈரான் நாணய மதிப்பு சரிவை சந்தித்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.