மட்டக்களப்பில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பாலம் ஒன்றின் கீழிருந்து ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த  கே.கரிகரன் (38-வயது) என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதால், கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடலை பாலத்திற்கு கீழே வீசியிருக்கலாமென உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.