மீண்டும் ஆட்சியமைக்கும் பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து!

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 350 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில் “பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன். அமைதியும் முன்னேற்றமும் வளங்களும் நிறைந்த தெற்காசியாவை உருவாக்க அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மோடியின் மாபெரும் வெற்றியுடனான அடுத்த ஆட்சிக்கு உலகத் தலைவர்கள் பலரும் தமது ஆதரவுகளைத் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.