திருகோணமலையில் முஸ்லீ்ம்களின் மீனவப் படகுகள் எரிக்கப்பட்டதால் பதற்றம்!!

திருகோணமலை புல்மோட்டையில் இனந்தெரியாதோரால் மீனவர்களின் 3 மீன்பிடிப் படகுகள் மற்றும் இரண்டு என்ஜின்களுக்கு இன்று (25) முற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளது.


புல்மோட்டை, ஜின்னாபுரக் கடற்கரையோரத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் மற்றும் 40 குதிரைவலுக் கொண்ட 2 என்ஜின்களுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மீனவர்களின் படகுகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.